சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உள்ளடக்கிய ஒளிப்படங்களை உலகத்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது. இன்று புதன்கிழமை சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ஜிஎல் பீரிஸ் பிரித்தானியால் பல சந்திப்புக்களை நிகழ்த்தவுள்ள நிலையில் - இப்படங்களை வெளியிட்டுள்ளது.கைதுசெய்யப்பட்டவர்களை சுட்டுக்கொன்றுள்ளதுடன், அவர்களின் உடலங்களையும் நிர்வாணப்படுத்தியுள்ளமையை இவ் ஒளிப்படங்களில் காணக்கூடியதாகவுள்ளது.



மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



பார்த்திபன் தமிழ்நாடு
இந்த செய்தியை படிக்கும் அணைத்து வாசகர்களும், வருகின்ற 28 ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கம் மத்திய தீர்பாயத்திற்க்கு அதிக அளவிலான நபர்கள் தந்திகளை (விடுதலை புலிகளின் மீது உள்ள தடையை நீக்குமாறு) அனுப்புவது நல்லது. தந்திகளை அதிக நபர்கள் அனுப்பும் விதமாக தடைளை நீக்க தீவிரமாக போராடும் அமைப்புக்கள், இதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது. மத்திய தீர்பாயத்திற்க்கு, எந்த விலாசத்துக்கு தந்தி அனுப்ப வேண்டும் என்பதை தெரிவிப்பது வசதியாக இருக்கும். டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித், மத்திய தீர்பாயம், சென்னை உயர் நீதிமன்றம், சென்னை 1 என்ற விலாசம் சரியாக இருக்குமா. மேலும், டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் அவர்களின் மின்னஞ்சல் விலாசம் கிடைத்தால் அதிகமான தமிழர்கள், தடையை நீக்க வலியுறுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம். தயவு செய்து தெரிவிக்கவும்.