தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.பார்வதி அம்மாளின் உடல்நிலைமை மோசமடைந்து வருவதாகவும், அவர் தனது பிள்ளைகளை பார்க்க விரும்புவதாக மருத்துவமனை செவிலியர்களை அழைத்து தினமும் கண்ணீர் வடிப்பதாகவும், அவரை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது உடல் நிலை ஆபத்தானதொரு நிலையிலோ, சுகதேக நிலையிலோ இல்லாமல் இரண்டுக்கும் நடுவே மாறிமாறி இருப்பதாகவும், திட உணவுகளை விடுத்து திரவ உணவுகளையே அதிகம் உட்க்கொள்கின்றார் என மருத்துவர்கள் தெரிவிப்பதாகவும், பார்வதி அம்மாள் பிள்ளைகள் பார்க்க விரும்புவதாகவும், ஆனாலும் அவர்கள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடும் என்று எண்ணியும் இருநிலை மனப் போராட்டத்திற்கு அவர் உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



0 Responses to தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் உடல் நிலை மோசமடைந்தது