Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவைத் தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ஆர.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் நிகழ்வு.

அன்னை பார்வதி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தியதை அடுத்து ஆர.கே நகர் பகுதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் திருமதி கௌரி சங்கர் அவர்கள் மெழுகு தீபம் ஏற்ற அதை அனைவரும் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் ஆவல் கணேசன், சமுத்திராதேவி, ஆனந்தராசு,சதிஸ்,கோபால்,அருண்,கௌரிசங்கர்,ராசகுமார் மற்றும் ஏராளமான பெண்கள் உட்பட குழந்தைகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு அனுமதி வழங்காமல் மறுத்த காவல் துறையினர் பெண்கள் பெருமளவில் பங்கேற்பதை தெரிந்துகொண்டு தங்கள் முயற்சியிலிருந்து பின்வாங்கினர்.






0 Responses to ஆர்.கே நகரில் நடைபெற்ற வீரத்தாயின் நினைவஞ்சலி நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com