Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை வந்துள்ள தெற்காசிய பிராந்தியத்திற்கான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தூதுக்குழுவினர் வடபகுதியில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்த மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிபர்களிடம் கேட்டறிந்துள்ளனர். இந்தக் குழுவிற்குத் தலைமை தாங்கி வந்தவர் லண்டன் கிறீன் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராகிய ஜீன் லம்பட் ஆவார். இவர்கள் நேற்றைய தினம் இமெல்டா சுகுமாரைச் சந்தித்துள்ளனர்.

அவர்கள் தொடுத்த பல கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய இமெல்டா சுகுமார், கடைசியா அவர்கள் கேட்ட கேள்விக்கு நான் அரசியல்வாதி அல்ல ஒரு அரசாங்க உத்தியோகத்தர் எனப் பதிலளித்துள்ளாரம். யாழ் நிலைகுறித்தும், திருடர்கள் பெருகிவருவது குறித்தும், இராணுவ நடமாட்டம் குறித்தும் பலவகையான கருத்துக்களைத் தெரிவித்துவரும் இவர் ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவிடம் இது குறித்து ஏதும் சொல்லாமல், தான் அரசியல்வாதி இல்லை எனக் கூறி தப்பித்துள்ளார். யாழ் நிலமைகளை ஒரு அரசியல்வாதி தான் தெரிவிக்கவேண்டும் என்ற நிலை இலங்கையில் இல்லை. ஒரு அரசாங்க அதிபர் என்ற வகையில் அவருக்கு அந்தத் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.

ஆனால் அவர் அரசுக்குச் சார்பாக இயங்குவதால், தான் அரசியல்வாதி இல்லை என்று காரணம் காட்டி நழுவியுள்ளார் அவ்வளவுதான்.


0 Responses to நான் அரசியல்வாதி இல்லை: யாழ்.அரச அதிபர் இமெல்டா (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com