27.02.2011 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு Marxdormoy மண்டபத்தில் பொதுசுடரினை தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர் சுதர்சன் அவர்கள் ஏற்றிவைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டு ஈகைச்சுடரினை மாவீரன் மணிமாலன் அவர்களின் தந்தையார் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மக்கள் சுடர் வணக்கத்தையும், மலர் வணக்கத்தையும் செய்திருந்தனர்.
கலைபண்பாட்டுக்கழகத்தினராலும், இங்கு வாழும் இசைக்கலைஞர்களாலும் பார்வதியம்மா நினைவாக எழுதப்பட்ட பாடல்கள் , கவிதைகள், பல வாசிக்கப்பட்டும், பாடல்களாகவும் பாடப்பட்டன. வெண்திரையில் தாயவள் பார்வதியம்மாவின் இறுதி நிகழ்வும், ஒரு புறநாறுற்று வீரத்தாயின் வீர சபதம் காட்சிப்படுத்தப்பட்டது.
பார்வதியம்மா நினைவாக அபைப்புக்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் வாசித்தளிக்கப்பட்டன. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்;பில் உரையாற்றியவர் ஒரு வீர மறவனை பெற்றெடுத்தது, கருவிலேயே மானத்தையும், வீரத்தையும், தீரத்தையும் ஊட்டிய அன்னை என்றும், மனிநேயமற்ற சிங்கள் ஆட்சியாளர்களாலும், அதற்கு துணைபோனவர்கள் பற்றியும், தள்ளாத வயதில் கணவனை இழந்து தான் பெற்ற பிள்ளைகளோடு சேரமுடியாமலும், பார்க்க முடியாமலும் செய்து அவரின் இறுதிக்காலத்தில் தேவைப்பட்ட வைத்தி உதவியை கூட தர மறுத்து இதனை தமது அரசியல் நலனாக பாவிக்க முற்பட்டதையும், ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியகாலம் தமிழ் மக்களுக்கு கனிந்து வரும் என்று மானத்தமிழன் தேசியத்தலைவன் சுட்டக்காட்டிய வழியில், காட்டியவர்களின் பணியில் நாம் அனைவரும் இணைந்து தொடர்ந்தும் தாய்மண்ணின் விடிவிற்கான பாதையில் பயணிக்க வேண்டும் அதற்காக பேதமின்றி, விட்டுக்கொடுப்புடன், அர்பணிப்புடன் உண்மையாக, உழைக்க வேண்டும் அதுவே நாம் தேசியத்தலைவரின் தாய் அன்னை பார்வதியம்மாவிற்கும், மாண்புடன் மரணித்த மாவீரர்களுக்கும் நாம் செய்கின்ற உண்மையான ஈக வணக்கமாகும் என்றும் கூறப்பட்டது. நம்புங்கள் தமிழீழம் பாடல் இசைக்கப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு நிகழ்வுகள் நிறைவு கண்டன.
அதே போன்று பிரான்சில் ஆர்nஐந்தோய், வல்து ஈரோப்பா, நந்தியார், வில்லியே லூபெல், போன்ற இடங்களில் வாழும் தமிழ் மக்கள் பார்வதியம்மாவுக்கு ஈகைச்சுடர் ஏற்றி ஈக வணக்கம் செய்திருந்தனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.



0 Responses to பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற வீரத்தாயின் வீரவணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)