Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களின் மறைவு குறித்து உலகத் தமிழ் பண்பாட்டு இயக்க தலைமைச் செயலகத்தின் இரங்கற் செய்தி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் அனபுத் தாயார் திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அவர்களின் மறைவு குறித்து இலங்கையில் மட்டுமின்றி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துகின்ற இந்த வேளையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் சார்பில் ஜேர்மனியிலிருந்து இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு துரை கணேசலிங்கம் வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்மை விட்டு பிரிந்து மீளாத் துயில் கொள்ளும் வீரத்தாய் பார்வதி அம்மாள் அவர்கள் யாழ்ப்பாண தமிழர் சமூகத்தின் ஒரு சராசரித் தாய் ஆவர். அவருக்கும் தனது பிள்ளைகள் நல்ல கல்வி கற்று ஒரு சிறந்த கல்விமானாகவோ அன்றி சமூகம் போற்றிப் பாராட்டுகின்ற ஒரு உயர்பதவி வகிக்கும் அளவிற்கு உயர வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருந்திருக்கும்.

ஆனால் தனது கனி~; புதல்வன் யாருமே எதிர்பார்க்காக அளிவிற்கு மிகவும் வியப்புக்குரிய ஒரு பாதையை தேர்ந்தெடுத்து உள்ளார் என்ற செய்தி அந்த தாயை எட்டியபோது அவரது உள்ளம் என்ன வகையான உணர்வை பெற்றிருக்கும் என்பதைப்பற்றி நாம் தீவிரமாக ஆராயத் தேவையில்லை.

மனதில் ஒரு திகைப்பு அத்தோடு ஏக்கம் அத்துடன் அச்சம் தரும் நினைவலைகள் எல்லாம் அவர் முன்னால் தோன்றி மறைந்திருக்கும்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல தனது பிள்ளை தேர்ந்தெடுத்துள்ள பாதை ஒரு சாதாரண பாதை அல்ல. அது தமிழ் மக்களின் விடிவிற்கான பாதை. ஆத்துடன் எவ்வித சுயநலமே அற்ற உன்னத பாதை. ஒரு காலத்தில் உலகெங்கும் இருந்து வியக்கும் விழிகள் தனது பிள்ளையை தலையை உயர்த்திப் பார்க்க உள்ளன. என்றெல்லாம் அந்தத் தாய் நிச்சயம் எண்ணியிருப்பார்.

ஆமாம் என் இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே. நமது பார்வதி அம்மாள் தனது வாழ்வின் இறுதிவரை இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகவோ அன்றி மாறி மாறியோ அனுபவித்து இந்த உலகத்தில் எந்தத் தமிழ்த் தாயும் அனுபவிக்காத உணர்வுகளை அனுபவித்துச் சென்றிருக்கின்றார் என்றால் அது மிகையாகாது.

எமது நம்பிக்கைகளின் அடிப்படையில் அந்த வீரத்தாய் நிச்சயமாக சொர்க்கத்திற்கே சென்றிருப்பார். இது நிச்சயம். ஆனால் தற்போது சொர்க்கத்தில் உறங்கும் அந்தத் தாய் இந்த மண்ணுலகில் அனுபவித்த வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் நாம் புரட்டிப் பார்த்தால் அதை நாங்கள் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு சோகம் நிறைந்திருக்கும் மனது நிறைந்த அனுபவம் பிறந்திருக்கும்.

தனது பிள்ளை தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் அதுவும் விடுதலைப் புலிகள் இயக்கம் போதிய பலமற்ற இயக்கமாக இருந்த காலத்தில் நமது வீரத்தாய் பார்வதிஅம்மாள் மிகுந்த வேதனையையும் சோதனைகளையும் சந்தித்திருப்பார் என்றால் அது மிகையாகாது.

ஒவ்வொரு நிமிடமும் தனது பிள்ளைக்கு என்ன ஆபத்து வந்துவிட்டதோ என்று ஏங்கித் தவிக்கின்ற ஒரு சாதாரணத் தாயாக அந்த பார்வதிஅம்மாள் இருந்திருப்பார்.

பின்னாளில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பலம்பெற்ற இராணுவ மற்றும் அரசியல் அமைப்பாக வளர்ச்சியடைந்த போது அந்தத் தாய் சற்று மனங்குளிர்ந்து தனது பிளைளையின் நோக்கம் நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

தான் நேசிக்கும் மக்களை கொடிய சிங்கள ஆட்சியாளரிடமிருந்து விடுவித்து உலகம் வாழ்த்தியும் போற்றியும் நிற்கும் ஒரு தனித் தமிழ்த் தேசத்தின் தலைவனாக தனது பிள்ளையை மனக்கண்ணால் கண்டிருப்பார். அப்போது அந்தத் தாயின் உள்ளத்தில் நிச்சயம் ஒரு துளியேனும் சந்தோசம் வழிந்திருக்கும்.

இவ்வாறான இந்த அற்புதத்தாய் தொடர்ச்சியாக தனது பிள்ளையின் தலைமையில் ஒரு மாபெரும் இயக்கத்தின் வளர்ச்சியை எவ்வாறு கண்டிருப்பாரோ அதே போல முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ச்சியாக துன்பங்களையே அனுபவித்த ஒரு அமைதித்தாயாக நமது கண்களுக்குத் தெரிந்தார்.

ஆமாம் எம் அன்புக் குரிய இனிய தமிழ் உறவுகளே! தொடர்ந்து தனது துணைவரை இழந்து அந்த அன்னை தவித்தார். போதிய வைத்திய வசதிகள் கிடைக்காமல் இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நடத்திய கபட நாடகங்களால் அவர் கலங்கினார். முதல்வர் கருணாநிதி தன்மீது இரக்கம் காட்டி தமிழ்நாட்டில் தான் வைத்திய சிகிச்சை பெற உதவி செய்வார் என்று என்று எதிர்பார்த்தார்.

ஒன்றுமே கிட்டா நிலையில் அந்த வீரத்தமிழ் மகனைப் பெற்ற தாய் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் ஒரு ஓரமாக உறங்கும் ஒரு சாதாரண பெண்மணி போல் அங்கே உறங்கினார்.

அவருக்கு இறுதி நேரத்தில் கைகொடுத்த திரு சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை மக்கள் ஆகியோரது அன்பான அணைப்பால் அந்த அன்னை தனது சகல துன்பங்களையும் மனத்தினுள் மறைத்து வைத்துக் கொண்டு தனது துணைவர் எவ்வாறு மனக்கவலைகளுடன் தனது உயிர்போகும் நேரத்தில் காணப்பட்டாரோ, அதேபோலவே இந்த அற்புதத்தாயும் தனது வாழ்வின் இறுதிவரை இன்பத்தையும் துன்பத்தையும் இணைந்து அனுபவித்து வெற்றி தோல்வி என்ற இரண்டையும் நேரடியாகக் கண்டார்.

இனிவரும் காலங்களில் ஈழத்தமிழர்களின் வீரம் என்ற அத்தியாயம் எப்போது எழுதப்பட்டாலும் அதில் முதன்மைத் தாயாக, முதலிடம் கொடுத்து பூசிக்கப்படும் ஒரு வீரத்தாயாக பார்வதி அம்மாள் குறிப்பிடப்படுவார் என்பதும் என்றும் அவர் எம் மனங்களில் இருப்பார் என்று நாம் நம்புகின்றோம்.

இவ்வாறான ஒரு நேரத்தில் இந்தத் வீரத்தாயின் இழப்பு என்பது என்மை இன்னும் உற்சாகப்படுத்தும் ஒரு கருவியாகவே நமக்கு பயன்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் உலகத் தமிழ்பண்பாட்டுஇயக்கம் உலகத்தமிழ் மக்களிடம் விடுக்கின்றது.

இவ்வாறு உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் யேர்மன் வாழ் திரு துரை கணேசலிங்கம் விடுத்த இரங்கற் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to யேர்மன் வாழ் திரு துரை கணேசலிங்கம் விடுத்த இரங்கற் செய்தியில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com