Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீமான் விஜயலட்சுமி கூத்தாட்டத்தைச் சிந்திப்பதற்கு முன்னர் ஒரு தடவை அண்ணா காலத்து அரசியலை சிந்திக்க வேண்டும்…

சீமான் போலவே அன்று அண்ணாவும் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை இந்திய சமுதாயத்தின் மீதும், அதன் போலி முகங்கள் மீதும் தயக்கமின்றி முன் வைத்தார்…

அவருடைய வாதங்களை எதிர்கொள்ள பத்தாம்பசலிகளாக இருந்த அன்றைய காங்கிரஸ்காரரால் முடியவில்லை. அதனால் அவர்கள் அண்ணாவிற்கு எதிராக வகுத்த வியூகம் அக்காலத்து பிரபல நடிகை பானுமதி..!

பானுமதிக்கும் அண்ணாவுக்கும் தொடர்பு என்று காங்கிரஸ் கதை பரப்ப ஆரம்பித்தது..

அண்ணா சிந்தித்தார்… எப்படி இந்த சதிவலையை அறுத்தெறியலாம்…?

சீமான் போல போலீஸ் வழக்கை சந்திக்கவோ.. பானுமதியின் கற்பை வைத்திய பரிசோதனை செய்யவோ அண்ணா சந்தர்ப்பம் கொடுக்கவில்லை.. தனது பாணியிலேயே பதில் கொடுத்தார்..

- நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! பானுமதி படிதாண்டா பத்தினியும் அல்ல… ! –

கதை முடிந்தது.. பானுமதியை வைத்து ஆட முற்பட்ட காங்கிரசின் வியூகம் அறுந்து, காங்கிரஸ் ஆட்சியும் வீழ்ந்தது..

இது அண்ணா காலத்து வியூகம்..

இப்பொழுது செந்தமிழன் சீமான் காலம்..

அண்ணா போல சில பதிலளிக்க முடியாத கேள்விகளை அவரும் முன் வைக்கிறார்.. அவருடைய கேள்விகளுக்கான பதில் காங்கிரசிடம் இல்லை.. ஆகவே பானுமதி பாணியில் விஜயலட்சுமியை களமிறங்கியுள்ளார்கள்…

இந்த நேரம்…

- நான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! விஜயலட்சுமி படிதாண்டா பத்தினியும் அல்ல..! – என்று சொல்ல சீமானிடம் நெஞ்சுரமில்லை..

சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்று கூறி வருகிறார்..

போயும்போயும் தமிழ்நாடு சட்டத்தையா சந்திக்கப்போகிறார்… நெற்றிப் புருவங்கள் உயர்கின்றன.. இதற்குள் :

ஒரு பாக்கட் கஞ்சாவை சீமான் வீட்டில் வைத்து, அவரைக் கைது செய்யாமல் விஜயலட்சுமியின் கற்புப் புனிதத்தை பரிசோதனை செய்கிறதாம் தமிழ்நாடு போலீஸ்…

சிரிப்பதா.. அழுவதா..? ஆனால் :

நான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று ஒரு எஸ்.எம்.எஸ்சை சீமானுக்கு அனுப்பியுள்ளார் விஜயலட்சுமி..

ஒருத்தி சம்மந்தமில்லாத ஒருவனுக்கு தற்கொலை செய்யப்போவதாக எஸ்.எம்.எஸ் அனுப்பினால் ஒன்று அவளுக்கு மூளையில் எங்கோ பிழை இருக்க வேண்டும்.. இல்லை அவளுடைய எஸ்.எம்.எஸ்சிற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியம்…

விஜயலட்சுமி உண்மையாகவே சீமானை விசுவாசமாக காதலித்திருந்தால் அவருக்கு அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள், உரையாடல்களை ஏன் சேமித்து வைத்தாள்..? ஆகவே அவருடைய மனதில் கபடமான ஒரு நோக்கம் இருந்துள்ளது தெரிகிறது.

இப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்ற விவஸ்த்தை தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இருக்கிறதா..?

தமிழ்நாடு வெள்ளை வேட்டி அரசியல்வாதிகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தது இரண்டு மனைவிகள், பல சின்னவீடுகள் இல்லாத பேர்வழிகளை தேடிப்பிடிப்பது மாபெரும் கடினம்.

கற்பும், கண்ணகியும், சிலம்பும், செந்தமிழும், குறளோவியமும், புறநானூற்றுப் பூங்காவுமாக தமிழ் வேதம் ஓதும் மூதறிஞர் மு.கருணாநிதிக்கு எத்தனை மனைவிகள் என்று கேட்டால் இது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய தேவை வராது.

தி.மு.க தலைவர்கள் விபச்சாரியுடன் படுத்துவிட்டு, அவளுடைய பணத்தைக் கொடுக்காது அடித்து விரட்டிய கதை கண்ணதாசனின் வனவாசத்தில் இருக்கிறது. அவரும் இவர்களோடு சேர்ந்து படுத்துவிட்டுத்தான் எழுதினார். அவருக்கும் பல மனைவிகள்..

கோடம்பாக்கம் போனால் பல செவிவழி கதைகளைக் கேட்கலாம், பெண்கள் விடயத்தில் அங்கு நிலவும் அறியாமையை நினைத்து கவலைப்படலாம்.

அத்தனை பழமும் சொத்தைகள் தாண்டா ஆண்டவன் படைப்பினிலே இதில் அத்திப் பழத்தை குற்றம் சொல்ல யாருக்கும் வெட்கமில்லை என்கிறது ஒரு பாடல்..

ஒரு நடிகையைத் தவிர, சீமானைக் குற்றம் சொல்ல தகுதியுள்ள அரசியல் தலைவர் யார்..? சினிமா நடிகர் யார் ?

……………!!

சீமான் மீது போடப்பட்டுள்ளது மோசமான அரசியல் வியூகம்.. இதிலிருந்து தப்பவும், காங்கிரசை மேலும் முகவரி இல்லாமல் செய்யவும் ஒரே வழி சீமான் அண்ணா பாணியில் உண்மையை வெளிப்படையாகப் பேசுவதுதான்..

ஆளுக்கு இரண்டு பெண்டாட்டிகள், கூடவே ஆறேழு வைப்பாட்டிகள்.. ஆனால் இங்கிருக்கும் பெண்கள் எல்லாம் கண்ணகிகள்…

ரெண்டும் ரெண்டும் நாலு விடையாவருது ஏழு..!

கணக்கிட்டாள் நடிகை குஸ்பு.. அதுதான் அவள் கற்புக்கு துணிச்சலாக விளக்கம் தந்தாள்.. அந்த விளக்கம் அவளுடைய வட இந்திய அனுபவமல்ல.. கோடம்பாக்கத்தில் வைத்து அவள் கண்ட கற்பிற்கு அவள் கொடுத்த விளக்கம்.

தலைவர் பிரபாகரனின் தம்பி சீமான்..!

செந்தமிழன் சீமான்..!

பாயும்புலி சீமான்..!

அந்தப்புலி பாய வேண்டிய இடம் சிங்களவரின் கோட்டை..!

அப்படிப்பட்ட செந்தமிழ் புலி விஜயலட்சுமி வீட்டிற்குள் பாய்ந்துவிட்டதாகக் கூறுவது கொஞ்சம் ஓவர்..!

இருந்தாலும்:

ஆபும்.. புல்லும் அடித்து ஓவரா இருப்பவர்களின் வாயில் சிக்குப்படாமல் சீமான் தப்ப வேண்டுமானால் ஒரே வழி..

அண்ணாவைப் போலவும்.. ஐஸ்வர்யா ராய் போலவும் நடந்ததை வெளிப்படையாகப் போட்டுடைப்பதுதான் ஒரே வழி..!

சீமான் முற்றும் துறந்த முனிவனுமல்ல..! விஜயலட்சுமி படிதாண்டா பத்தினியுமல்ல..!

சீமான் ஒரு மனிதன் !

இதுவரை அவனுடைய கொள்கைகள் உன்னதமானவை..!

சீமான் எமக்கு வேலைக்காரனல்ல.. நாம் வாய்க்குவந்தவாறு கதைக்க: அவனும் மனிதன்தான்..

அவனுடைய மனித உணர்வையும் விஜயலட்சுமியையும் சம்மந்தப்படுத்துவது வேறு..

அவனுடைய அரசியலையும் விஜயலட்சுமியையும் சம்மந்தப்படுத்துவது வேறு..

இப்போது தமிழ்நாட்டில் இரண்டாவது சம்மந்தப்படுத்தல் நடப்பது தெளிவாகத் தெரிகிறது..

அலைகள்

4 Responses to அறிஞர் அண்ணாவுக்கு பானுமதி..! செந்தமிழன் சீமானுக்கு ஒரு சின்னத்திரை விஜயலட்சுமி..!

  1. மானை வீழ்த்த நடக்கும் சதி..!
    02 06 2011
    உண்மையாகவே பெரிதும் வருத்தப்படுகிறேன்..!

    நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..!

    விஜயலட்சுமி என்னும் இந்த நடிகை சொல்லியிருப்பது அபாண்டமானது..!

    ஒரு பெண்ணி்ன் நடத்தையை வைத்து அவரை எடை போட முடியுமா..? அல்லது ஒரு சம்பவத்தினாலேயே அவரை பலி கடாவாக்க முடியுமா..?

    முன்பு அப்படியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது திருந்தியிருக்கலாமே..?

    ஏன் சீமானே மாறியிருக்கலாமே.. ஒரு நிமிடத்தில் அப்படி நடந்திருக்கலாமே..?

    இப்படியெல்லாம் பகுத்தறிவோடு சிந்திக்காமல் இந்தச் செய்தியைப் படித்த காலை பொழுதிலேயே நான் உணர்ந்துவிட்டேன் இது நிச்சயம் பொய்யான புகாராகத்தான் இருக்கும் என்று..!

    முதல் காரணம் செல்வி.விஜயலட்சுமியின் குணநலன்கள் அவர் சின்னத்திரைக்குள் கால் வைத்த தினத்தில் இருந்து என் காதுகளுக்கு எட்டியபடியே இருந்ததினால்தான்..! அவரைப் பற்றிய பல திடுக்கிடும் செய்திகள் பலவிதமான நண்பர்களிடமிருந்து ஒரே மாதிரியாக வந்து சேர்ந்து கொண்டேயிருந்தன.

    அது ஒன்றே ஒன்றுதான்.. அவர் தகுதிக்குரியவர் என்று யாரை நினைக்கிறாரோ அவரிடமெல்லாம், “ஐ லவ் யூ..” சொல்வார்..! சிலரை இப்படியே கிறங்கடித்திருக்கிறார். பலர் அது உண்மையோ என்று நம்பி விஜயலட்சுமியுடன் சின்சியராகப் பழகத் துவங்க, சில நாட்களிலேயே வேறொருவருக்கு “ஐ லவ் யூ..” சொல்லிவிட்டு தாவி விடுவார் என்றார்கள்..!

    சின்னத்திரை உலகம் மிகவும் சிறியது.. முதல் நாள் ஓரிடத்தில் கேமிரா உதவியாளராகவும், செட் உதவியாளராகவும், தயாரிப்பு உதவியாளராகவும் பணியாற்றுபவர் மறுநாள் வேறொரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேரிடும். மறுநாள் மீண்டும் முதல் நாள் சீரியலுக்கே திரும்பி வர வேண்டியிருக்கும்.. இப்படி இவர்கள் குண்டுச் சட்டிக்குள் ஓடுவதைப் போலவே ஓடிக் கொண்டிருப்பதால் ஒரு ஷூட்டிங்கில் நடப்பது, அடுத்த நாள் வேறொரு ஷூட்டிங்கில் லைவ் ரிலேவாக ஓடிக் கொண்டிருக்கும்.

     
  2. அவைகளனைத்தையும் மீண்டும் இங்கே சொல்லி அவரைக் கேவலப்படுத்துவது எனது நோக்கமல்ல..! ஆனால் உண்மையே அவருடைய நடத்தையைப் பொறுத்துதான் இருக்கிறது என்பதால் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது..!

    சீரியல்களில் நடிக்கும்போது, “நான் உங்களைக் காதலிக்கிறேன்..” என்று சில புரொடெக்ஷன் மேனேஜர்கள், கேமிராமேன்கள், இயக்குநர்களிடத்தில் விஜயலட்சுமி கூறியிருக்கிறார். இரண்டாவது யூனிட் இயக்குநரைக்கூட அவர் விட்டுவைத்ததில்லை.




    “ஏன் லேட்டா வர்றீங்க..?” என்று கேட்டால்கூட 'கையைப் பிடித்து இழுத்தார்' என்ற ரேஞ்ச்சுக்கு ராடன் ஆபீஸுக்கு புகாரை அனுப்பி வைப்பார் விஜயலட்சுமி. இந்தத் தொல்லை தாங்காமலேயே அவரிடம் நேராகப் பேசாமல் இடைத்தரகராக இணை இயக்குநர் ஒருவரை வைத்துக் கொண்டுதான் அவரைச் சமாளித்தார்கள் இயக்குநர்கள்..!

    அவரைத் தவிர்த்துவிட்டு சீரியலை தொடர முடியாத சூழல் வந்தபோதுதான், வேறு வழியில்லாமல் அனைத்து விவகாரங்களும் ராடன் டிவி நிர்வாகத்தின் முன் வைக்கப்பட்டு பஞ்சாயத்தாக்கப்பட்டது. அப்போதுதான் விஜயலட்சுமி சொன்ன “ஐ லவ் யூ” கதைகள் அனைத்தும் அம்பலமாகின..!

    'தங்கவேட்டை' நிகழ்ச்சியின் இயக்குநர் ரமேஷ் மீது தன்னை காதலித்து ஏமாற்றியதாக விஜயலட்சுமி பொய்யாக, போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு போன பின்புதான் அவரை அந்த இரண்டு தொடர்களிலிருந்தும் தூக்கினார்கள். பாவம் அந்த இயக்குநர் ரமேஷ்.. சில நாட்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். பெரும்பாடுபட்டு அந்த வழக்கை வாபஸ் பெற வைத்தார்கள்..!

    2008-ம் ஆண்டு கன்னட நடிகர் லோகேஷின் மகன் ஸ்ரூஜன் லோகேஷுடன் விஜயலட்சுமி காதல் கொண்டு நிச்சயத்தார்த்தமும் நடந்தது. பின்பு இந்தக் காதலும் 6 மாதத்தில் முறிந்து போய்விட்டது. ஸ்ரூஜன் வேறொரு சின்னத்திரை நடிகையை திருமணம் செய்து கொண்டு போய்விட்டார். விஜயலட்சுமி மீண்டும் இப்போதுதான் 'பாஸ் என்ற பாஸ்கரன்' படத்தில் தமிழில் ரீ எண்ட்ரீயாகியிருந்தார்..!

     
  3. இவருடைய இந்த நிலைமையோடு, சீமானின் நிலைமையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்..!

    வீடு முழுவதும் உதவி இயக்குநர்கள்.. தற்போதைய நிலையில் 10 இளைஞர்கள், அவருடைய வீட்டில் அவருடனேயே தங்கியிருக்கிறார்கள். ஒரு முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். மீண்டும் ஒரு முறை கைது செய்யப்பட்டு சாதா சிறைவாசம் அனுபவித்தார். அப்போதெல்லாம் இந்த விஜயலட்சுமி எங்கேயும் தென்பட்டதில்லை. 2 ஆண்டுகளாக காதலித்தோம் என்று கதை விடுவதற்கும் ஒரு அளவில்லையா..?

    சீமானின் வீடு 24 மணி நேரமும் ஜாபர்சேட்டின் கண் பார்வையில்தான் இருந்தது. அவருடைய உதவி இயக்குநர்கள் அனைவருமே சீமானைப் போன்று தமிழ்த் தேசியம், ஈழம், பிரபாகரன் என்ற எண்ணத்திலேயே இருப்பவர்கள். இது போன்ற சின்னப்புள்ளத்தனத்திலெல்லாம் ஈடுபட சீமானுக்கெங்கே நேரமிருக்கப் போகிறது..?

    அத்தோடு கட்சி வேறு ஆரம்பித்த கையோடு எப்பவும் நிருபர்களின் கண் பார்வையிலேயே இருந்தவர் இந்த விவகாரம் உண்மையாக இருந்திருந்தால் இந்நேரம் மாட்டியிருப்பார். சீமானை நன்கு அறிந்தவர்கள் இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பார்கள்..! அவருக்கு காதல், கல்யாணம் இதிலெல்லாம் அக்கறையில்லை என்பது திரையுலகத்தினருக்கே தெரிந்த விஷயம்தான்.

    இப்போதுதான் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சியினரின் வற்புறுத்தலினால் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்ணை மணக்கலாம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்று சிலிர்க்கிறார்கள் அவரது உதவி இயக்குநர்கள்..!

    விஜயலட்சுமியுடனான அவரது தொடர்பு ஒன்றே ஒன்றுதான். அது விஜயலட்சுமியின் அக்கா உஷாவின் வரதட்சணை புகார் பற்றியது. விஜயலட்சுமியின் அக்கா கணவர் என்னைப் போன்ற சற்று யூத்தான தமிழ் இளைஞர்களுக்கு நன்று அறிமுகமானவர். 'திருட்டு புருஷன்' என்று ஆண்டு முழுவதும் காலை காட்சியாக ஓடி சாதனை படைத்த திரைப்படத்தின் கதாநாயகன் ராஜ்பாபு. இவர் நடிகை ஜெயப்ரதாவின் சொந்தத் தம்பி.

    இவருடனான குடும்ப உறவு முறிந்த நிலையில், தனது அக்காவின் மகனை மீட்டுக் கொடுக்கும்படி 2008-ம் ஆண்டு விஜயலட்சுமி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அந்தச் சமயத்தில்தான் சீமானை விஜயலட்சுமி சந்தித்ததாக சீமானின் வழக்கறிஞர் சொல்கிறார். சீமானை விஜயலட்சுமி தெரிந்து வைத்திருந்ததற்கு காரணம் சீமான் இயக்கிய 'வாழ்த்துகள்' திரைப்படத்தில் அவரும் நடித்திருந்ததுதான். இந்தச் சின்னத் தொடர்பை வைத்து 3 ஆண்டுகள் கழித்து சூப்பரான திரைக்கதை அமைத்து கதை கட்டிவிட்டிருக்கிறார்கள் சிலர்..!

    நேற்று இந்தத் தகவல் நிருபர்களுக்கு எப்படி சென்றது என்பதும் ஒரு சுவாரசியம்..! காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்தான் சினிமா பத்திரிகையாளர்களைத் தொடர்பு கொண்டு இந்த விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் சொல்கிறார்கள். பத்திரிகையாளர்கள் கமிஷனர் அலுவலகத்துக்குப் போகும் முன்பேயே, விஜயலட்சுமி புகார் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்..!

    ஆக முன்பே நன்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நாடகமாகவே இதனை நான் கருதுகிறேன்..! இதற்கு விஜயலட்சுமி என்ற பெண்ணும் உடந்தை என்பதுதான் வேதனை..!

     
  4. ஒருவரின் கொள்கைகளை, கருத்துக்களை நேருக்கு நேராகச் சந்திக்கத் தைரியமில்லாத கோழைகள், அவரை எப்பாடுபட்டாவது வீழ்த்திவிட வேண்டும் என்று நினைத்து கேரக்டர் அஸாஸினேஷன் செய்ய முயற்சிப்பது கேவலமானது..!

    சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சீமானின் புயல்வேகப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் டவுசர் கிழிந்தது, அக்கட்சியினருக்கு பெரும் கோபத்தைக் கிளறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்..!

    தி.மு.க. நின்ற இடங்களிலெல்லாம் தோல்வி என்றால் அது ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு இருந்த கடுப்பு என்றே எடுத்துக் கொள்ளலாம். ஆனால் காங்கிரஸ் மீது..? அவர்கள் ஆளும் கட்சியினரின் தோழமைக் கட்சி என்ற ஒரு விஷயம் மட்டும்தான். ஆனால் இந்த ஒன்றுக்காகவேதான் காங்கிரஸுக்கு இவ்வளவு பெரிய தோல்வியா என்றால் இதை நான் நம்பவில்லை..!

    ஊழலில் கூட்டணி அமைத்தது.. உயர்ந்து கொண்டேயிருந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த திராணியற்ற நிலையில் ஆட்சி நடத்தியது.. கூடவே எண்ணற்ற தமிழ் இளைஞர்களை கொந்தளிக்க வைத்திருந்த முள்ளிவாய்க்கால் படுகொலையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி செய்த துரோகமும், அந்தத் துரோகத்தை சீமான் தோலுரித்துக் காட்டியதாலும்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு இந்த அளவுக்கான படுதோல்வி கிடைத்தது என்று நான் உறுதியாக நம்புகிறேன்..!

    இல்லையெனில் தி.மு.க. கூட்டணி தோற்றிருந்தாலும், காங்கிரஸுக்கு சுமாராக 15 தொகுதிகளாவது கிடைத்திருக்கும்.. அதிலும் மாதத்தில் 20 நாட்கள் தொகுதியிலேயே இருந்து வீடு, வீடாக சென்று தனது பெயரை நிலை நாட்டி, கோடியை செலவிட்டிருந்த ஹெச்.வசந்தகுமாரும், வேலூரில் சிறந்த எம்.எல்.ஏ. என்று 4 முறையும் பெயரெடுத்திருந்த சி.ஞானசேகரனும், ராமநாதபுரத்தில் மதப் பெரியவர்களின் முழு ஆசியைப் பெற்றிருந்த ஹசன் அலியும் தோற்றிருக்கவே மாட்டார்கள்..!


    பாரதீய ஜனதா என்ற கட்சி இடையில் புகுந்து ஓட்டுக்களைக் களவாடிய காரணத்தினால்தான் தற்போதைய 6 சீட்டுக்களே காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. பா.ஜ.க.வும் வராமல் இருந்திருந்தால் முட்டைதான் கிடைத்திருக்கும்..!


    ஆக.. காங்கிரஸின் இந்தத் தோல்வியில் சீமானுக்கு பெரும் பங்கு உண்டு என்பது அக்கட்சியினருக்கு கோபத்தைக் கிளப்பி, இப்படியொரு பொய்யான புகார் கொடுக்க பின்புலமாக இருந்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது..!

    இன்று காலையில் இருந்தே சினிமா துறையினர் பலரும் நிச்சயம் இது கட்டுக் கதை என்றே சொல்கின்றனர். இந்த அளவுக்கு சீமானின் நிஜ சுயரூபம் சினிமாவுலகில் தெரிந்திருக்கிறது..! இது ஒன்று போதும் அவருக்கு..!

    எனக்கு சாபமிட மனசு வரவில்லை. ஆனாலும் மனம் பொறுக்காமல் சொல்கிறேன்.. விஜயலட்சுமியும், இந்தப் பழிக்குப் பின்னால் இருப்பவர்களும் வருங்காலத்தில் நிச்சயம் வெம்புவார்கள்..!

    நன்றி. தமிழ் இணையங்கள்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com