63 வது ஆண்டின் மனித உரிமை நாளையொட்டி யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவையாகிய நாம் ஏனைய நாட்டு மக்கள் படும் அவல நிலையை போல் இலங்கையில் ஈழத்தமிழர் மக்களின் அவலை நிலையை எடுத்துக் கூற விரும்புகிறோம் .
இரண்டாம் உலகபோரின் பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் 10.12.1948 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட ' மனித உரிமைகள் பிரகடனம்' 300 க்கும் மேலான பாசைகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக நாடுகளில் மனிதஉரிமையின் அத்திவாரமாக திகழ்கின்றது. இருந்தும் இன்றைய காலத்திலும் நம் முன்னே மிக கொடூரமான மனிதஉரிமை மீறல்களை அனைத்து கோணங்களிலும் நாம் காண்கின்றோம். உலகளாவியரீதியில் பட்டினி அரசியல் அடக்குமுறை பொருளாதார நெருக்கடி சூழல் அழிவு தற்போதும் அன்றாடதாக உள்ளது.
ஐ.நா. வின் ஒரு சின்னமாக திகழும் 'மனித உரிமைகள்' குறைந்த வடிவத்தில் கூட சில நாடுகளில் கடப்பிடிக்கப்படுகின்றதில்லை என்பது மிக வேதனையானது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் மசோதா நடைமுறைப்படுத்துவதற்கான தண்டனைக்குரிய விதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமலுக்கு வந்தது அனைவரும் அறிந்ததே.
இதன் காரணம் யேர்மனியில் கூட இனப்படுகொலை மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது திறமையாக வெளிப்படையாக வழக்கு தொடர உறுதி செய்யப்பட்டுள்ளது . ஜெனரல் மேஜர் ஜெகத் டியாஸ் போன்ற போர்க்குற்றவாளிகள் நாம் வாழும் நாட்டில் தொல்லையின்றி இருப்பிடம் கொண்டதை இங்கு கவலையுடன் சுட்டிக் காட்டுகிறோம்.
மனிதவுரிமைகள் பாதிக்கப்படும் பொதுமக்களின் மீது வன்முறை செலுத்தப்படும் மற்றும் போர் குற்றங்கள் புரியப்படும் இக் காலத்தில் யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை ஆகிய நாம் குற்றங்களுக்கு பொறுப்புடையவர்களுக்கு நேர்த்தியான தண்டனைகள் பெறவேண்டும் என்பதை இங்கு வலியுறுத்துகின்றோம் .
இவ் ஊடக அறிக்கையை பல்வேறு யேர்மனிய மனிதவுரிமை அமைப்புகளுக்கும் ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனுப்பபட்டது என்பதை இத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம். .
ஈழத்தமிழர் மக்கள் அவை -யேர்மனி



0 Responses to மனித உரிமையை பாதுகாப்போம்!