தகுதியற்ற மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்ததாக சி.பி.ஐ சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மறுத்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு, மத்திய பிரதேச மாநிலத்தின் இண்டக்ஸ் மருத்துவ கல்லூரிக்கு இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அன்புமணி தலைமையிலான சுகாதார துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
எனினும் இக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு முறையான தகுதிகளை கொண்டிருக்கவில்லை எனவும், உள்நோக்கத்துடன் ஆதாயம் தேடும் முயற்சியில் அதற்குரிய அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியிருந்த சிபிஐ, டெல்லி நீதிமன்றில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள அன்புமணி ராமதாஸ்
எனக்கு எதிராக கூறப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. விதிமுறைகளின்படியே அனைத்தையும் செய்தேன். மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் தவறு எதுவும் நடக்கவில்லை. சாதகமாகவும் நான் நடந்து கொள்ளவில்லை. குற்றமற்றவனாக வெளியே வருவேன். குற்றப்பத்திரிகையின் நகலை கூட இன்னும் நான் பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.



0 Responses to சி.பி.ஐ யின் குற்றச்சாட்டுக்களுக்கு அன்புமணி ராமதாஸ் மறுப்பு