Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் எவ்விதமான நிபந்தனைகளையும் விதிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க வேண்டும். அதேபோன்று கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக் குழுவை புறக்கணிக்கக் கூடாது என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அரசியல் தீர்வுத்திட்டம் என்பது இன்று நாட்டில் அத்தியாவசியமான விடயமாகவே காணப்படுகின்றது. எனவே ஏனைய அரசியல் கட்சிகளும் சாதகமான தீர்வொன்றுக்கு பங்களிப்புக்களை செய்ய வேண்டுமே தவிர கடந்த கால தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பது நாகரீகமான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில்,

நாளை மே முதலாம் திகதி உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் தினம். இதனை அனைத்துக் கட்சிகளுமே உள்நாட்டில் வேறுபாடுகளை மறந்து உழைக்கும் மக்களின் எழுச்சிகளுக்காக பல்வேறு கூட்டங்களை நடத்துகின்றது. இவ்வாறு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

அரசியல் தீர்வுத் திட்டத்தில் பங்கெடுக்கும் இரு பிரதான தரப்புக்களுமே வெளிப்படைத் தன்மையை பாதுகாக்க வேண்டும். அத்துடன் நேர்மையும் விட்டுக்கொடுப்பும் மிகவும் அவசியமாகும். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பே தவிர கூட்டமைப்பிற்கு மட்டுப்பட்ட விடயமல்ல. எனவே தீர்வுத் திட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்விதமான நிபந்தனைகளையும் அரசாங்கம் முன் வைக்கக் கூடாது.

ஏனெனில் இவ்வாறு நிபந்தனைகளை முன் வைப்பதால் அநாவசியமான சந்தேகங்களே ஏற்படும். தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியல் உட்பட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் எல்லைகளிட்டோ நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டோ பேசுவதால் பயன் ஏற்படப் போவதில்லை. இதனை இரு தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோன்று இனப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய சந்தர்ப்பங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக் கூடாது. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசியல் தீர்விற்காக கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

0 Responses to தீர்வு விடயத்தில் அரசாங்கம் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com