அசாமில், 6 நாட்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த கலவரத்தில் இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர். கலவரக்காரர்களை ஒடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
வன்முறை மற்றும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மன்மோகன்சிங் சனிக்கிழமை செல்கிறார். அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மற்றும் மறுவாழ்வு முகாம்கைளை பார்வையிடுகிறார்.
மேலும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள கோக்ராஜ்கர் மாவட்டத்தில் முதல்வர் தருண் கோகாய் இன்று ஆய்வு செய்து வருகிறார்.
வன்முறையில் 41 பேர் உயிரிழப்பு: அசாம் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்
பதிந்தவர்:
ஈழப்பிரியா
26 July 2012



0 Responses to வன்முறையில் 41 பேர் உயிரிழப்பு: அசாம் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்