Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பிலாக கருத்தாடல் நிகழ்வொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

பொஸ்ரன் பகுதியில் இடம்பெற்றிருந்த இக்கருத்தாடல்களத்தில், தமிழகத்தில் இருந்து பேராசிரியர் மணிவண்ணன், கனடாவில் இருந்து பேராசிரியர் சேரன் உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் Ali Beydoun , Libra Institute கற்கைநெறி மையத்தின் தலைவர் Dr.Maria Szonert உட்பட பல வளஅறிஞர்கள் பங்கெடுத்திருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தாடலை நெறிப்படுத்தினார்.

இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு எதிராக நடந்தேறிய போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை மையமிட்டு இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடு இக்கருத்தாடலின் மையப்பேசு பொருளாக அமைந்திருந்தது.









0 Responses to இலங்கைத்தீவில் இனப்படுகொலை : அமெரிக்காவில் இடம்பெற்ற கருத்தாடல் களம் (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com