Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனி விமானத்தில் பறக்கும் போதும் செல்போன் பயன் படுத்தலாம் என்று மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

விமானம் பயணிக்கும் போது, விமானத்தில் பயணிக்கும் பயணிகள் தங்களது செல்போனைப் பயன்படுத்தக் கூடாது, போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இப்போது செல் போனைப் பயணிகள் விமானப் பயணத்தின் போது பயன் படுத்தலாம் என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஃபிளைட் மோட் வசதியைப் பயன்படுத்தி விமானத்தில் செல்போன் மற்றும் லேப்டாப், டேப்லெட் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விமானத்தில் பயணிக்கும் போது, பயணிகள் இசை கேட்பது, வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது சாத்தியமாகும் என்றும் தெரிய வருகிறது.

0 Responses to இனி விமானத்தில் பறக்கும் போதும் செல்போன் பயன்படுத்தலாம்!:விமானப் போக்குவரத்து ஆணையம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com