Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

இ.வி.கே.எஸ். இளங்கோவன் காமராஜர் அரங்கத்தில் கொலை மிரட்டல், பொய்யான கணக்கு வழக்குகள் என்கிற முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று அவர் மீது காமராஜர் அரங்கின் முன்னாள் ஊழியர் வளர்மதி என்கிற பெண் புகார் அளித்திருந்தார்.அதன் படி இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது 5 பிரிவுகளில் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிகிழமை முன் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று வ்சாரனைக்கு வந்த நிலையில், இளங்கோவனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள உத்தரவுப் பிறப்பித்துள்ளனர் என்னென்ன நிபந்தனைகள் என்பது இன்னமும் வெளிவராத நிலையில், இ.வி.கே.எஸ்.இளங்கோவன் டெல்லியில் முகாமிட்டு உள்ளார்.

அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து, தமிழகத்தில் தம்மீது வெளிவரும் புகார்கள் குறித்து விளக்கம் அளிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

0 Responses to இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனை முன் ஜாமீன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com