இலங்கையில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோர் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்கு தென்னாபிரிக்காவின் ஆலோசனையையும், உதவியையும் பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் இலங்கையில் யாரும் காணாமற்போகாமல் இருக்கும் நோக்கில், சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து அரசாங்கம் செயற்படவுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் நேற்று புதன்கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில் இலங்கையில் யாரும் காணாமற்போகாமல் இருக்கும் நோக்கில், சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து அரசாங்கம் செயற்படவுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
0 Responses to காணாமற்போனோர் தொடர்பிலான உண்மையைக் கண்டறிய தென்னாபிரிக்காவின் உதவி பெறப்படும்: மங்கள சமரவீர