Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை விதிக்கும் சட்டமொன்றைக் கொண்டு வரும் நோக்கில், அமைச்சரவை பத்திரமொன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு எதிர்வரும் வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளது.

இந்துசமய மற்றும் கலாசார அலுவர்கள் திணைக்களம், இது தொடர்புடைய சட்டத்தை ஏற்கெனவே தயாரித்துள்ளதாகவும் அதற்குச் சட்டவரைஞர் திணைக்களம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சமய சடங்குகள் என்ற அடிப்படையில், மிருக பலி கொடுப்பதற்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இதற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் போன்ற பகுதிகளில், இந்து ஆலயங்களில் இவ்வாறு மிருக பலி செய்யப்படுவது குறைவில்லாமல் இருந்தது. இதற்கு எதிராக, பல்வேறு அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகள் குரல் எழுப்பியிருந்தனர்.

அம்மன், பைரவர், முனியப்பர், காத்தவராயர், ஐயப்பன், வீரபத்திரர், பத்திரகாளி அம்மன் போன்ற தெய்வங்களை குலதெய்வமாக வழிபாடு செய்யும் கிராமப்புற ஆலயங்களிலேயே, இவ்வாறான மிருகபலி கொடுக்கும் சடங்குகள் செய்யப்படுகின்றன.

குறித்த கிராமங்களின் பாதுகாவல் தெய்வங்களுக்காக, ஆடு, மாடு, கோழி போன்றவற்றை பலி கொடுக்கின்றனர். மாடுகளை பலி கொடுப்பது தற்போது பல ஆலயங்களில் நிறுத்தப்பட்டுள்ள போதிலும் ஆடுகள், கோழிகளை பலி கொடுக்கும் வழக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to இந்து ஆலயங்களில் மிருக பலிக்குத் தடை; அமைச்சரவைத் பத்திரம் விரைவில் தாக்கல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com