நேற்று புதன்கிழமை (23.09.2009) 2மணியிலிருந்து 4மணிவரை நெதர்லாந்தில் "டென் காக்" இலுள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக, சிறீலங்கா அரசால் தடுப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை உடன் விடுவிப்பதற்கு உதவுமாறுகோரி கவனயீப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
இதன்போது நெதர்லாந்துத் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சகத்தில் சிறீலங்காவிற்குப் பொறுப்பான உரைச் சந்தித்து நெதர்லாந்தின் பல இடங்களிலும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை அம்மையாரிடம் ஒப்படைத்து, முகாம்மக்களை விடுவிக்கஉதவுமாறு வேண்டிக் கொண்டனர்.
இதன்போது கருத்துத்தெரிவித்த அம்மையார், மகிந்தஅரசானது இவ்விடயத்தில் பிடிவாதமாக உள்ளதாகவும் ஆனால், இம்மக்களை விடுவிக்க ஐரோப்பியஒன்றியம் மூலமாக தாங்கள் தொடர்ந்தும் முயற்சிசெய்வதாக தெரிவித்துள்ளார்.
தடுப்புமுகாம் மக்களை விடுவிக்க மறுக்கும் சிறீலங்கா: நெதர்லாந்து
பதிந்தவர்:
தம்பியன்
24 September 2009



0 Responses to தடுப்புமுகாம் மக்களை விடுவிக்க மறுக்கும் சிறீலங்கா: நெதர்லாந்து