முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா சிறிலங்காவில் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றும் தனது அரசியல் பயணத்துக்கு இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.தான் அரச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்புதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் என்று தன்னை சந்தித்து பேசிய மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் சரத் பொன்சேகா உறுதியளித்துள்ளார் என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தனத அரசியல் பயணத்துக்கு இந்தியாவின் ஆதரவு நிச்சயம் தேவை என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் என்று இந்திய செய்தி நிறுவனமான பி.ரி.ஐ. தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.



0 Responses to சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு பாதுகாப்பளிப்பேன்: இந்தியாவின் ஆதரவு தேவை - பொன்சேகா தெரிவிப்பு