நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கனடாவின் ரொறன்ரோ நகரை சென்றடைந்துள்ளார். ஈழமுரசு வருடம் தோறும் நடத்தும் தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை விழாவில் கலந்துகொள்வதற்காக ரொறன்ரோ நகரை சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.எதிர்வரும் 26ம் திகதி வியாழக்கிழமை மாலை ஐந்து மணிக்கு ரொறன்ரோ நகரிலும், 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மொன்றியல் நகரிலும் நடைபெறவுள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் அகவை 55 எழுச்சி நிகழ்வான இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் பங்குபற்றவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.









நன்றி: சங்கதி



0 Responses to இருப்பாய் தமிழா நெருப்பாய் நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குநர் செந்தமிழன் சீமான் ரொறன்ரோ சென்றடைந்தார்