Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவை 2010 ஆம் ஆண்டின் முக்கிய சுற்றுலாவுக்கு செல்லக்கூடிய இடமாக நியுயோர்க் ரைம்ஸ் விதந்துரைத்ததை தமிழீழ பாடகியான மாயா கண்டித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத்தீவின் பகுதிகளின் ஒளிப்படங்களை ருவிற்றர் போன்ற சமூக இணைய தளங்களின் ஊடாக பரப்பி, நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தவறாக செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அவரால் மீள் பிரசுரம் செய்யப்பட்ட ஒளிப்படம் ஒன்றில்இந்த கடற்கரையா நீங்கள் போய் பார்க்க போகின்றீர்கள்?” என்ற தலைப்பில் முன்னர் மன்னாரில் ஒரு குடும்பத்தையே தூக்கில் போட்டு சிறிலங்கா இராணுவத்தினர் கொன்ற காட்சியை இணைத்துள்ளார்.


அதேவேளை அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்பேஸ் ஒடிசி என்ற பாடலின் மூலமும் அதற்கான பரப்புரைகளில் மாயா ஈடுபட்டுள்ளதை, இணைக்கப்பட்டுள்ள பாடல் காட்சி மூலம் காணலாம்.


நன்றி: ஈழநேஷன்

0 Responses to சிறிலங்காவை 2010 ஆம் ஆண்டின் முக்கிய சுற்றுலா இடமாக தெரிவுசெய்ததை எதிர்த்து மாயா பரப்புரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com