Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கேணல் ராம் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் இன்னமும் கிழக்கு காடுகளில் ஒழிந்திருப்பதாக தாம் நம்புவதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அரசின் தடுப்புக்காவலிலுள்ள கேணல் ராமை தடுப்புக்காவலிலுள்ள முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு தலைவராக நியமித்து தேர்தல் வன்முறைகளையும் பொதுமக்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அண்மையில் விடுத்துள்ள அறிக்கையை மறுத்துள்ள சிறிலங்கா இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார -

விடுதலைப்புலிகளின் தளபதிகளின் ஒருவரான கேணல் ராமை இராணுவம் கைது செய்யவில்லை என்றும் அவர் கிழக்கு காடுகளில் ஒளிந்திருப்பதாக தாம் நம்புவதாகவும் கூறினார்.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to ராமை கைது செய்யவில்லை என்று சிறிலங்கா இராணுவம் தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com