Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இதுவரையில் முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை என பிரதமர் டி.எம்.ஜயரட்ன நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இயங்கி வருவதாகவும், பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நலன்புரி நிலையங்கள் தங்கியிருந்த 765 விடுதலைப் புலி ஆதரவாளர்களை கடந்த மாதம் பொலிஸார் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட வேண்டியது அவசியமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் முழுமையாக ஒழிக்கப்படவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com