Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெளிக்கடைச் சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தினால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு ஆபத்தில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் வீ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவின் பாதுகாப்பு எந்த வகையிலும் அச்சுறுத்தல் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத் தளவாட மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக 30 மாத கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவிற்கு நேற்றைய தாக்குதல்களின் போது எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்திற்கும், சரத் பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்கும் இடையில் இடைவெளி காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தினால் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com