தமிழீழ விடுதலைப் புலிகளை மாவீரரை ஈன்ற தாய் இருக்கிறாளே அவள் யார்? நெருப்பை சுமந்த கருப்பை. நஞ்சை விடுதலைக் களத்தில் உண்ட பிள்ளைக்கு பாலை ஊட்டி வளர்த்த தாயின் நெஞ்சை எப்படி மறப்போம். கோழையை மகனாக மகளாகப் பெறாமல் ஒரு வீரனை வீராங்கனையை தமிழீழ மண்ணுக்கு கொடையாக்கினானே தந்தை அவன் தோழை வாழ்த்த இவ்வேலை பயன் படட்டும் வாழ்த்துவோம் மாவீரர் பெற்றோரை மனமார வாழ்த்துவோம் தன்னிகர் அற்ற அந்த தாய் தந்தையர் எப்படியெல்லாம் தங்கள் பிள்ளைகளை மண் நிமிரட்டும் என்று கொடையாக்கினார்கள்.
ஆழக்கடலில் அங்கயற் கண்ணி எதிரி கப்பலை உடைக்க தன்னை தூள் தூலாக்கி வெடிக்கச் செய்த செய்தி அவளை ஈன்ற பெற்றோரை எப்படி உலுக்கி இருக்கும் இருந்தாலும் எங்கள் பிள்ளை நாட்டுக்காகவே மடிந்தால் என்று பெருமைப்பட்ட அவள் பெற்றோர்களின் ஆழக்கடலின் ஆழமான தாய் மண் பற்றை தமிழீழ பற்றை எப்படி நாம் மறக்க முடியும.;
விடுதலை பசிக்கு தன்னையே உணவாக்கிக் கொண்ட திலீபனை ஈன்ற அவன் தந்தை எப்படித் துடித்தார் கண்ணீர்; வடித்தார் என்பதையும் பின்பு அவன் வீரச்சாவில் எப்படி மகிழ்ந்தார் மகனைப் புகழ்ந்தார் என்பதையும் நான் அறிவேன்.
கரும்புலிகளாய் களமாடி கண்மூடிய பெரும் புலிகளின் சாவினை எப்படி அவர்களின் பெற்றோர்கள் எதிர்கொண்டார்கள் என்பதையெல்லாம் களமாடிய புலிகள் வரலாற்றில் கண்டோம்.
ஒன்றா இரண்டா நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களின் பெற்றோர்களை தமிழீழ விடுதலை வரலாற்றில் இதுவரை நாம் எரிமலை குன்றாய் புயலின் ஓங்கிய அலைவீச்சாய் வரலாற்றில் பார்த்தோம். சங்ககாலத்தில் பிள்ளைகளை போர் களத்திற்கு எண்னை தடவி தலைவாரி அனுப்பி வைத்த அதே வரலாற்றின் தொடர்ச்சியாய் தமிழீழத்தின் சமராடிய புலிகளின் பெற்றோரை நாம் பார்க்கிறோம் இந்த வரலாறு இனியும் தொடரும்.
மாவீரர்கள் மடிந்தார்கள் என்று சொல்லுகிறார்கள் இல்லை தமிழீழ மண்ணில் பிறந்தார்கள் இனியும் பிறப்பார்கள் பிறந்து கொண்டே இருப்பார்கள். விடுதலைக்கான தேவை இருக்கும் வரை விடுதலைக்கான போராட்டமும் இருக்கும். தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிகாட்டுதலில் தமிழீழ விடுதலைக் களம் தொடர்ந்து நிலை கொள்ளும் மாவீரர் பெற்றோரை வாழ்த்துவோம் மாவீரர் பெற்றோரை வாழ்த்துவோம் மாவீரர் பெற்ரோரை வணங்குவோம் மாவீரர்பெற்றோரை வணங்குவோம் மாவீரர் பெற்றோரை பின்பற்றுவோம் மாவீரர் பெற்றோரை பின்பற்றுவோம்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to தேசியத் தலைவரின் வழிகாட்டுதலில் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிலை கொள்ளும்: காசி ஆனந்தன்