Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முதல்வர் ஜெயலலிதாவை நேற்று (26.7.2011) தலைமைச்செயலகத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தனது கட்சி நிர்வாகிகள் பேராசிரியர் தீரன், சாகுல் ஹமீது, அய்யநாதன், சிவகுமார், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோருடன் சந்தித்தார்.

ஜெயலலிதா - சீமான் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பதால் தலைமைச்செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சந்திப்பின் போது ஜெயலலிதாவிடம் சீமான், ‘’இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் பன்னாட்டு போர் நெறிமுறைகளை மீறி, இனப்படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப் படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அவர் மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றியதற்கு தமது கட்சியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

0 Responses to ஜெயலலிதா - சீமான் : முதல் சந்திப்பு

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com