Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் தனக்கு திருப்தி இல்லை எனவும் அண்மையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது போதாமல் உள்ளதாகவும் சரத் பொன்சேகா கூறியதாக ஸின்ஹுவா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவின் உதவியாளர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் 15 உத்தியோகத்தர்கள் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இருப்பினும் தனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பில் தனக்கு திருப்தி இல்லை எனவும் தான் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பதால் தனக்கு பலத்த பாதுகாப்பு தேவை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

0 Responses to தனது உயிருக்கு அச்சுறுத்தலாம்!: பொன்சேகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com