Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவு தளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைக் கலங்கள் மீது கடற்புலிகளால் கடுமையான தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

21.07.1996 அன்று 600 படையினருடன் அலம்பில் கரையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படைத் தரையிறங்கு கலத்தினை இலக்கு வைத்து கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் ஆகியோரால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

கரும்புலிப் படகு தரையிறங்கு கலத்தினை நெருங்கி வருவதை கண்டுகொண்ட சிறிலங்கா கடற்படையினர் ஒரு சேர கடற்கரும்புலிகளின் படகின் மீது தாக்குதல்களை நடாத்திக் கொண்டிருந்தனர். கடற்படையின் தாக்குதலில் சிக்காதவாறு கடற்கரும்புலிகள் தமது படகினை செலுத்தி தரையிறங்கு கலத்தினை நெருங்கியவேளை எதிர்பாராதவிதமாக படகு வெடித்துச் சிதறியது.

இதனால் குறித்த தரையிறங்கு கலமும் அதில் சென்ற 600 படையினரும் மயிரிழையில் உயிர் தப்பினர்.

இக்கடற்சமர், அலம்பிலிருந்து முன்னகர்ந்த படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல் உட்பட ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையில் 21.07.1996 அன்று,

கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் (வேதாரணியம் ஜெயக்காந்தன் - சங்கத்தானை, யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி கப்டன் சயந்தன் (தம்பிப்பிள்ளை துரைரத்தினம் - அக்கரைப்பற்று, அம்பாறை)
மேஜர் யோகேஸ் (பூரணம் நவரட்ணகாந்தன் - கும்புறுப்பிட்டி, திருகோணமலை)
கப்டன் காயத்திரி (தர்மலிங்கம் விஜிதா - குமுழமுனை, முல்லைத்தீவு)
கப்டன் முகிலன் (மித்தன்) (ஆறுமுகம் தர்மலிங்கம் - கரடியனாறு, மட்டக்களப்பு)
கப்டன் பழனிமுத்து (அருளானந்தம் விமலதாஸ் - தாளையடி, யாழ்ப்பாணம்)
கப்டன் மறைமலை (சிற்றம்பலம் ஈழத்துநாதன் - திருகோணமலை)
லெப்டினன்ட் வைகை (முத்திராமநாதன் தவக்கொடி - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஓவியா (செபஸ்ரியான்பிள்ளை பத்மசகாயகுனேந்தினி - சேந்தான்குளம், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இசையரசி (ஜோர்ச் ரூபினா - மணியந்தோட்டம், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இசைப்பிரியன் (சாமித்தம்பி கணேசமூர்த்தி - அக்கரைப்பற்று , அம்பாறை)
வீரவேங்கை புகழன் (கந்தசாமி சிவபாலன் கிரான், மட்டக்களப்பு)

ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

இதேநாளில் அம்பாறை மாவட்டம் பன்னலகமவில் அமைந்திருந்த தமது முகாமிலிருந்து மாந்தோட்டம் நோக்கி சுற்றுக்காவல் சென்ற சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலின்போது,

மேஜர் ஜெமினிக்கணேசன் (அலன்) ஆறுமுகம் சிவகுமார் - கல்முனை, அம்பாறை) என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாய் மண்ணின் விடிலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

0 Responses to முல்லைத்தள மீட்பின் போ​து காவியமான கடற்கரும்பு​லிகள் மிதுபாலன், சயந்தன் நினைவு நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com