ஜெயா டிவி'யில் நிர்வாகத் துணைத் தலைவராக இருந்த ரங்கநாதனை பணியிலிருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார்.
மேலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, அந்நிறுவனத்தின் நெட்வொர்க் பொறுப்பாளர் மஞ்சுநாத், முன்னாள் நிர்வாக இயக்குனர் அனுராதா வின் நேர்முக உதவியாளர் ஜனார்த்தனம் ஆகி யோரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட் டையனின், சிறப்பு நேர்முக உதவியாளராக, 1991 முதல் 1996 வரை இருந்தவர் ரங்கநாதன்.
செங்கோட்டையன் சிபாரிசில், ஜெயா டிவி'யில் சட்ட ஆலோசகர் மற்றும் நிதி, நிர்வாக துணை தலைவராக ரங்கநாதன் பதவி யேற்றுக் கொண்டார்.
ஜெயா டிவி' கணக்குகளை, புதிய ஆடிட்டர் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு செய்தார். அப்போது, கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



0 Responses to ஜெயா டிவி துணைத் தலைவர்- இரு பணியாளர்கள் நீக்கம்