Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆப்ரிக்க நாடான மாலியில் தீவிரவாத அமைப்பு முக்கிய நகரான டியாபலியை கைப்பற்றி உள்ளது.

இந்நகரை மீட்கும் படி பிரான்ஸ் ஜனாதிபதி ஹோலண்டேயிடம், மாலி ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து தங்கள் நாட்டு படைகளை மாலிக்கு அனுப்பி உள்ளது. கடந்த 2 நாட்களாக விமான தாக்குதல் நடத்திய பிரான்ஸ், தற்போது டியாபலி நகருக்குள் நுழைந்துள்ளது.

இதனை தொடர்ந்து இராணுவத்தினரும், தீவிரவாதிகளும் தெருக்களில் நேருக்கு நேர் சண்டையிட்டு கொள்கின்றனர்.

இவர்களுக்கு உதவியாக கூடுதலாக 2500 வீரர்களை அவசரமாக பிரான்ஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில், நகருக்குள் நுழைந்து விட்டதால் இன்னும் 2 நாட்களுக்குள் நகரை மீட்டு விடுவோம் என பிரான்ஸ் தளபதி தெரிவித்துள்ளார்.

0 Responses to மாலியில் இராணுவமும், தீவிரவாதிகளும் நேருக்கு நேர் சண்டை: பதற்றம் அதிகரிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com