Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி அசாத் குடும்பத்தினருடன் போர்க் கப்பலில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி அஷாத் பதவி விலக கோரி, கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இவர்களை ஒடுக்க இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இச்சண்டையில் இதுவரையிலும் 60,000 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி அசாத் குடும்பத்தினருடன் டமாஸ்கசை விட்டு வெளியேறி விட்டதாகவும், போர்க் கப்பலில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ரஷ்ய கடற்படையினர் இவருக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சிரியா ஜனாதிபதி போர்க் கப்பலில் தஞ்சம்! ரஷ்யா உதவுகிறது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com