சர்வதேச போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு கடும் தண்டனை
வழங்க இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட
தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்
சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம், சம்மேளன தலைவர் அமீர் தலைமை சென்னையில்
நேற்று இடம்பெற்றது. 23 சங்கங்களைச் சேர்ந்த 69 உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் சர்வதேச போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு கடும் தண்டனை வழங்க இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை இராணுவத்தினர் மீது மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேநேரத்தில், இன்னும் இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் மீதமுள்ள தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தங்கள் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் நலனுக்காக தனி ஈழம் பெற்றுத்தர மாநில அரசு எடுக்கும் எல்லாவிதமான முயற்சிகளுக்கும், தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் இனிமேல் தாக்கப்படாமல் இருக்கவும்,இ சிறையில் இருக்கும் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
மாநில அரசு எடுக்கும் எல்லாவிதமான முயற்சிகளுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தனது முழு ஆதரவை அளித்துஇ தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் சர்வதேச போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு கடும் தண்டனை வழங்க இந்தியா தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் இலங்கை இராணுவத்தினர் மீது மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேநேரத்தில், இன்னும் இலங்கை சிறையில் வாடிக்கொண்டிருக்கும் மீதமுள்ள தமிழ் மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தங்கள் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் நலனுக்காக தனி ஈழம் பெற்றுத்தர மாநில அரசு எடுக்கும் எல்லாவிதமான முயற்சிகளுக்கும், தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தினரால் இனிமேல் தாக்கப்படாமல் இருக்கவும்,இ சிறையில் இருக்கும் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்யவும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
மாநில அரசு எடுக்கும் எல்லாவிதமான முயற்சிகளுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தனது முழு ஆதரவை அளித்துஇ தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்கும். மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Responses to போர்குற்றவாளி ராஜபக்சவுக்கு தண்டனை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெப்சி குழுக்கூட்டத்தில் தீர்மானம்