Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவில் இருந்து தப்பி வந்து தமிழத்தில் பதுங்கியுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்களை விநியோகித்ததாக கூறி, கத்தோலிக்க பாதிரியான அவர் மீது அமெரிக்காவின் எப்.பீ.ஐ. அமைப்பு வழக்கு பதிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு தப்பி வந்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய உதவுமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சு தமிழக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கு தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

0 Responses to புலிகளின் முக்கிய உறுப்பினரைக் கைது செய்து ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுப்பிரசுவாமி

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com