Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்தி இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இந்திய லோக்சபாவில் ஒன்றிணைந்து குரல் கொடுத்தன.

இன்றையதினம் லோக்சபாவில் உரையாற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச யுத்தக்குற்ற விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த விசாரணைக்கான நடவடிக்கைகளை இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங்கே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

அவரது உரைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் ஆதரவளித்திருந்தனர்.

0 Responses to இலங்கைத் தமிழர் பிரச்சினை அ.தி.மு.க மற்றும் தி.மு.க இணைந்து லோக்சபாவில் குரல் கொடுத்தன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com