Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 28.03.2014

பதிந்தவர்: தம்பியன் 28 March 2014

மேஷம்
சிவதூதனை வழிபட்டு சிறப்படைய வேண்டிய நாள். செல்வ நிலை உயரும். நீண்ட தூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.

ரிஷபம்
இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் எண்ணம் மேலோங்கும். மதிப்பும், மரியாதையும் உயரும்.

மிதுனம்
இழுபறியான காரியங்கள் இனிதே முடியும் நாள். உத்யோகத்தில் வேலைப்பளு கூடும். மன மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீக சொத்து தகராறு அகலும். மறைமுகப் போட்டிகளை சமாளித்து விடுவீர்கள்.

கடகம்
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காணவேண்டிய நாள். மனதில் குழப்பம் தோன்றி மறையும். ஒரு வகையில் சிக்கனமாக இருந்தாலும் குடும்பச் செலவு கூடும். மருத்துவச் செலவு உண்டு.

சிம்மம்
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிட்டும். நட்பு வட்டம் விரிவடையும். கல்யாண வாய்ப்பு கைகூடும்.

கன்னி
தடைகள் அகலும் நாள். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த கடன் பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். பிறர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல் நலம் சீராகி உற்சாகத்தோடு பணி புரிவீர்கள்.

துலாம்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமையடைவீர்கள். அரசுவழிச் சலுகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும்.

விருச்சகம்
பிரதோஷ வழிபாட்டினால் பெருமை அடைய வேண்டிய நாள். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும். பணத் தேவைகளை நண்பர்கள் பூர்த்தி செய்வர். நூதனப் பொருள் சேர்க்கையுண்டு.

தனுசு
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காண வேண்டிய நாள். வர வேண்டிய பண வரவுகள் வந்து சேரும். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பால் உற்சாகம் அடைவீர்கள். வளர்ச்சி கூடும்.

மகரம்
ஆசைகள் அரங்கேறும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும். தொழில் தொடர்பாக புதிய மனிதர்களைச் சந்திப்பீர்கள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். தொலைபேசி வழியில் வரும் தகவல் மகிழ்ச்சி தரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

மீனம்
ஆரவாரமில்லாமல் அமைதியாகச் செயல்பட வேண்டிய நாள். சிறிய தவறு ஒன்றை நினைத்துப் பெரிய அளவில் கவலைப்படுவீர்கள். வழிப் பயணத்தில் சந்தித்தவர்களால் பிரச்சினைகள் உருவாகலாம்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 28.03.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com