இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரச குழுவில், யாழ் மாநகர சபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்டவர்களும் அடங்கியுள்ளனர்.
புதுடில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். அதில், கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை புதுடில்லி போய் சேர்ந்தனர்.
இதனிடையே, நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் தன்னுடன் இணைந்து பங்கேற்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை அவர், நிராகரித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
புதுடில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இன்று மாலை 06.00 மணிக்கு இடம்பெறும் நிகழ்வில் இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கிறார். அதில், கலந்து கொள்வதற்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை புதுடில்லி போய் சேர்ந்தனர்.
இதனிடையே, நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் தன்னுடன் இணைந்து பங்கேற்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை அவர், நிராகரித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.




0 Responses to மோடி பதவியேற்பு விழா; மஹிந்த ராஜபக்ஷ குழுவில் யாழ் மேயரும் பயணம்!