Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் அண்மையில் விதித்த தடையினை அமுல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ள கனடா, அந்த அமைப்புக்கள் தமது நாட்டில் சட்டரீதியாக செயற்பட முடியும் என்று தெரிவித்துள்ளது.

பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்பிருப்பதாக தெரிவித்து கடனாவுடன் உறவுகளைப் பேணிவரும் சில அமைப்புக்கள் உள்ளிட்ட 16 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 424 பேரின் மீது இலங்கை அரசாங்கம் தடைகளை விதித்தது.

ஆனாலும், இலங்கையின் தடை கனடாவில் சட்டபூர்வமாக தாக்கம் செலுத்தாது என்றும், எனவே, குறித்த அமைப்புக்களும், நபர்களும் சட்டரீதியாக செயற்பட முடியும் என்றும் கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட்டும், இராஜாங்க அமைச்சர் லைனே ஜெலிச்சும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

0 Responses to புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான இலங்கையின் தடையை அமுல்படுத்தப் போவதில்லை: கனடா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com