தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது தொடர்ந்தும் சர்வதேச வலைப்பின்னலூடாக இயக்கி வருவதாகவும், நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. பயங்கரவாதம் தொடர்பில் அமெரிக்கா வருடாந்தம் வெளியிடும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
2009ஆம் ஆண்டு வடக்கின் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி மோதல்களோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே, அந்த இயக்கத்தின் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிகளை வழங்கிகொண்டு இருப்பதாகவும் அமெரிக்கா அறிக்கையிட்டுள்ளது.
அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பது தொடர்பில் தெரிய வந்துள்ளதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு வடக்கின் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதி மோதல்களோடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலையிலேயே, அந்த இயக்கத்தின் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாகவும், அதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிகளை வழங்கிகொண்டு இருப்பதாகவும் அமெரிக்கா அறிக்கையிட்டுள்ளது.
அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது, 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பது தொடர்பில் தெரிய வந்துள்ளதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.




0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றது: அமெரிக்கா