Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டின் மிகப்பெரியப் போர்க் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்திய கடற்படையின் மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யவை கோவா  சென்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார்.முன்னதாக அவருக்கு கடற்படையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர். கப்பலைப் பார்வையிட்ட பிரதமர் கடற்படையினரிடம் போர்க்கப்பல் குறித்த விவரங்களை கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர், வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது இன்று நாட்டிற்கு மிகவும் முக்கியமான நாள் என்று குறிப்பிட்டார். மேலும், அதி நவீன தொழில் நுட்பங்களுக்கு நாம் முன்னுரிமை தருவது என்பது நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.

0 Responses to நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com