இலங்கை - இந்திய ஒப்பந்தங்களுக்கு அமைய வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு வருகை தந்த இந்திய அமைதி காக்கும் படையினர் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன், தமிழ் மக்களை படுகொலையும் செய்தனர் என்று மீள்குடியேற்றத்துறை பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
1987 முதல் 90 வரை இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய அமைதிப்படையினர் பல தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்; பல தமிழர்களை கொலையும் செய்தனர். இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
0 Responses to இந்திய அமைதி காக்கும் படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டனர்: விநாயகமூர்த்தி முரளிதரன்