Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது எந்த கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இந்த கோரிக்கைகள் குறித்து இதுவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு உத்தியோகப+ர்வமாக தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் ரம்புக்வெல கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் நேரடியாக ஆளும் கட்சிக்கு தெரியப்படுத்தப்பட்டால், அது தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாடுக்கு வர அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

0 Responses to கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம் - அரசாங்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com