மன்னாரில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் பல வருடங்களாக உள்ள முள்ளிக்குளம் பகுதியில் தமிழ் மக்களை மீளவும் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை பாதுகாப்பு செயலாளருக்கும், மன்னார் ஆயர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள மன்னார் ஆயர், "மன்னாரில் கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் பல வருடங்களாக முள்ளிக்குளம் பகுதி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்த தமிழ் மக்கள் தொடர்ந்து அகதி வாழ்வு வாழ்கின்றனர்.
2012ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் நாம் நடத்திய சந்திப்பின்போது இந்தப் பகுதியை கடற்படையினர் உடனடியாக விடுவிப்பர் என அவர் எமக்கு உறுதியளித்தார். ஆனால், அந்த வாக்குறுதி இரண்டு வருடங்களாகியும் நிறைற்றப்படவில்லை.
இந்நிலையில், நாம் மீண்டும் அவரை சந்தித்து கடற்படையினரை முள்ளிக்குளம் பகுதியில் இருந்து உடனடியாக விலக்கி அந்தப் பகுதியில் தமிழ் மக்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளோம்” என்றுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை பாதுகாப்பு செயலாளருக்கும், மன்னார் ஆயர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள மன்னார் ஆயர், "மன்னாரில் கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் பல வருடங்களாக முள்ளிக்குளம் பகுதி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசித்த தமிழ் மக்கள் தொடர்ந்து அகதி வாழ்வு வாழ்கின்றனர்.
2012ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் நாம் நடத்திய சந்திப்பின்போது இந்தப் பகுதியை கடற்படையினர் உடனடியாக விடுவிப்பர் என அவர் எமக்கு உறுதியளித்தார். ஆனால், அந்த வாக்குறுதி இரண்டு வருடங்களாகியும் நிறைற்றப்படவில்லை.
இந்நிலையில், நாம் மீண்டும் அவரை சந்தித்து கடற்படையினரை முள்ளிக்குளம் பகுதியில் இருந்து உடனடியாக விலக்கி அந்தப் பகுதியில் தமிழ் மக்களை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளோம்” என்றுள்ளார்.




0 Responses to முள்ளிக்குளம் பகுதி மக்களை மீளக்குடியமர்த்த பாதுகாப்புச் செயலாளரிடம் மன்னார் ஆயர் கோரிக்கை!