Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழர்களை திரும்பவும் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்று, அதிகாரிகள் குழு மீண்டும் ஒரு நாள் ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது.

தமிழகத்தின் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்களை திரும்ப அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பதுக் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தைத் தமிழகம் புறக்கணித்து உள்ளது. இது தவறு என்றும், ஒரு அதிகாரியை அனுப்பி தமிழகத்தின் எண்ணங்களை எடுத்துரைக்க செய்ய வேண்டுமா இல்லையா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால், இன்று இலங்கை, இந்தியா ஆகிய இரு நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் மற்ற துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களை திரும்பவும் அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்பதால், மீண்டும் ஒரு நாள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to இலங்கைத் தமிழர்களை அனுப்பி வைப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com