சீனாவினால் கொழும்பில் முன்னெடுக்கப்படும் துறைமுக நகர (போர்ட் சிற்றி) நிர்மாணப் பணிகளை தொடர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டப் பணிகளின் போது பெரும் நிதி மோசடி இடம்பெற்றதாகத் தெரிவித்து, தேசிய அரசாங்கம் பணிகளை இடைநிறுத்தியிருந்தது.
எனினும், மீளாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் துறைமுக நகரப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் சீனா செல்லும்போது பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தலைமையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டப் பணிகளின் போது பெரும் நிதி மோசடி இடம்பெற்றதாகத் தெரிவித்து, தேசிய அரசாங்கம் பணிகளை இடைநிறுத்தியிருந்தது.
எனினும், மீளாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் துறைமுக நகரப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் சீனா செல்லும்போது பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.




0 Responses to சீனாவின் ‘கொழும்பு துறைமுக நகர’ நிர்மாணப் பணிகளைத் தொடர அரசு அனுமதி!