நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே நாட்டு மக்கள் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எனவே, அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தின் நிறைவேற்றத்தில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
19வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. இந்த நிலையில், இன்று திங்கட்கிழமை காலை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்றினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டு மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்க இலங்கை வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளது. 19வது திருத்தச் சட்டம் மீது இன்றும் நாளையும் விவாதம் நடைபெற்று நாளை மாலை அது நிறைவேற்றப்பட வேண்டும்.
1978ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டுவந்த போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர் அப்போதே அதனை எதிர்த்திருந்தனர். ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியே 1999ஆம் ஆண்டு அதனை நீக்க வேண்டும் என கோரியது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, 1994, 1999ஆம் ஆண்டுகளில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதி அளித்தார். பின்பு, 2005, 2010ஆம் ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷவும் அதே வாக்குறுதியை வழங்கினார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் நானும் அதே வாக்குறுதியை அளித்தேன்.
எனவே, எனக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 58 இலட்சம் மக்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஆகவே, 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
அதனால், நாளை 19வது திருத்தச் சட்டத்தை கட்சி பேதமின்றி வாக்களித்து நிறைவேற்றி நாட்டு மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியின் வளமான எதிர்காலத்திற்கு வழியேற்படுத்த வரலாற்று கடமையை செய்ய வேண்டும் என்று பாராளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.
எனவே, அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தின் நிறைவேற்றத்தில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
19வது திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதம் இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. இந்த நிலையில், இன்று திங்கட்கிழமை காலை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையாற்றினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டு மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்க இலங்கை வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளது. 19வது திருத்தச் சட்டம் மீது இன்றும் நாளையும் விவாதம் நடைபெற்று நாளை மாலை அது நிறைவேற்றப்பட வேண்டும்.
1978ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டுவந்த போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர் அப்போதே அதனை எதிர்த்திருந்தனர். ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியே 1999ஆம் ஆண்டு அதனை நீக்க வேண்டும் என கோரியது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, 1994, 1999ஆம் ஆண்டுகளில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதி அளித்தார். பின்பு, 2005, 2010ஆம் ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷவும் அதே வாக்குறுதியை வழங்கினார். 2015ஆம் ஆண்டு தேர்தலில் நானும் அதே வாக்குறுதியை அளித்தேன்.
எனவே, எனக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்த 58 இலட்சம் மக்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். ஆகவே, 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
அதனால், நாளை 19வது திருத்தச் சட்டத்தை கட்சி பேதமின்றி வாக்களித்து நிறைவேற்றி நாட்டு மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியின் வளமான எதிர்காலத்திற்கு வழியேற்படுத்த வரலாற்று கடமையை செய்ய வேண்டும் என்று பாராளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றுள்ளார்.
0 Responses to நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு: பாராளுமன்றத்தில் மைத்திரி உரை!