Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 18வது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக கையைத் தூக்கி பாவம் புரிந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இன்று 19வது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து பாவ மன்னிப்பைக் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நற்பணி மன்ற நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது, “நல்லாட்சி, நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், பொலிஸ் சுதந்திரம் ஆகிய பல விடயங்கள் நமது ஆட்சியின் மூலம் மீண்டும் இந்த நாட்டில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளன. இது போதாது. இந்த நல்ல விடயங்கள் நிரந்தரமாக வேண்டும் என்றால், அவை சட்டமாக்கப்பட வேண்டும்.

கடந்த ஆட்சியிலே நீதிமன்ற மற்றும் பொலிஸாரின் தலையீடு, ஊடக அடக்குமுறை ஆகிய சர்வாதிகார அடிப்படைகள் 18வது திருத்தத்தின் மூலம் சட்டமாக்கப்பட்டன.

ஆகவேதான், அவை சட்ட புத்தகத்தில் இருந்து அகற்றப்படும் முகமாக இப்போது 19வது திருத்தம் வருகிறது. இதனால்தான் 19வது திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்பதை நாம் உணரவேண்டும்.

18வது திருத்தம் ஒரு பாவ காரியம். ஆகவே அன்று 18வது திருத்தம் என்ற அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று பாவமன்னிப்பு பெற அரிய ஒரு சந்தர்ப்பம் கிடைகின்றது.

அன்று 18வதுக்கு ஆதரவாக கையை உயர்த்தியவர்கள், இன்று 18வது திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் 19வது திருத்தத்துக்கு ஆதரவாக ஒரு கையை மட்டுமல்ல, முடியுமானால், இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளித்து பாவமன்னிப்பு பெற வேண்டும். இதன்மூலம் மஹிந்தவின் காட்டாட்சி அதிகாரப்பூர்வமாக அரசியலமைப்பு ரீதியாக முடிவுக்கு வரும்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த காலத்தில் பாவம் புரிந்தவர்கள்; பாவ மன்னிப்பு பெற காலம் கனிந்துள்ளது: மனோ கணேசன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com