Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அவசரச் சட்டமாகப் பிரகடனம் செய்வதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 3வது முறையாக ஒப்புதல் அளித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அவசரச் சட்டமாக்க நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தொடர்ந்து எதிர்ப்புக் கிளம்பி வரும் நிலையில், அவசரச் சட்ட மசோதாவுக்கான காலக்கெடு வருகிற ஜூன் மாதம் 3ம் திகதியோடு முடிவடைகிறது. எனவே நேற்று மத்திய அமைச்சாரவை கூடி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அவசரச் சட்டமாக பிரகடனம் செய்ய ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இம்மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடியரசுத் தலைவரும் மத்திய அரசின் பரிந்துரையின் பேரில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அவசரச் சட்டமாகப் பிரகடனம் செய்ய இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

0 Responses to நிலம் கையகப்படுத்தும் அவசர சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com