Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் உரிமைப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமாயின் அரசாங்கத்திடம் கையேந்த வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்னீர் மீன்பிடியாளர்களை மேம்படுத்தும் நோக்கில் மீன்பிடி உபகரணங்களை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவில் அண்மையில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வினோநோதராதலிங்கம் கூறியுள்ளதாவது, “நாட்டில் எங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் நாங்கள் அரசாங்கத்திடம் கையேந்த வேண்டிய நிலை வராது.

முள்ளிவாய்க்காலில் அரசாங்கத்திடம் கையேந்த வேண்டிய நிலையை அரசாங்கம் உருவாக்கியது. மெனிக் பாமுக்கு போனபோது அரசாங்கத்திடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது பிரச்சினைகள் இனங்கண்டு தீர்க்கப்படாமல் இருப்பதால் தொடர்ந்தும் அரசாங்கத்திடம் கையேந்த வேண்டிய நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கின்றது.

தொடர்ந்தும் நாங்கள் இதற்கு இடமளிக்க முடியாது. நாங்கள் எங்களுடைய சொந்தக் காலில் நிற்பதற்கு எங்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன.” என்றுள்ளார்.

0 Responses to தமிழர்களின் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டால் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை: வினோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com