Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் ஏ9 வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், 15 பேர் வரை படுகாயமடைந்துள்ளதாகபொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி சென்ற பேருந்து வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த பயணிகள் நால்வர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், சாரதி அடங்கலாக 15 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 Responses to ஏ9 வீதியில் இன்று அதிகாலை கோர விபத்து - நால்வர் பலி! 35 பேர் படுகாயம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com