Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போதைப்பொருட்களை கடத்தி நாட்டுக்குள் கொண்டு வந்து விற்பனை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பிலான யோசனையை தான் முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கான வாதப்பிரதிவாதங்களை நாட்டில் இன்றுமுதல் ஏற்படுத்துவதற்கான யோசனையை தான் முன்வைப்பதாகவும், அதனூடாக வெளிப்படும் மக்களின் கருத்துகளை செவிமடுத்து அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

0 Responses to போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஜனாதிபதி ஆலோசனை முன்வைப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com