Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கட்சியை விட்டு விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ளும் திட்டம் ஏதும் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

கடந்த காலங்களில் பலர் தமது தனிப்பட்ட இலாபங்களுக்காக கட்சியை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அவர்கள், பொதுத் தேர்தலையடுத்து மீண்டும் கட்சியில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். எனினும், அவர்களை இணைத்துக் கொள்ளும் எண்ணம் ஏதும் கிடையாது என்று அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to கட்சியை விட்டு விலகியவர்களுக்கு இடமில்லை: ஐ.தே.க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com